பொன்னியின் செல்வன் படத்தை அருமையாக, இயக்கிய மணி ரத்தினத்தால் ஏன் தக் லைஃபை சரியாக இயக்க முடியவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். காரணம் ஒன்று தான். கதை சரியாக இருந்தால் மணி ரத்தினத்தால் நன்றாக இயக்க முடியும். ஆனால் கமல் கதையை தன் இஷ்டத்திற்கு சொல்ல. அதனை படமாக எடுக்க வேண்டும் என்றால், எந்தக் கொம்பனானும் முடியாது. 5 நாட்கள் ஆகியும் வெறும் 30 கோடியை தான் தக் லைஃப் சம்பாதித்துள்ளது என்பது பெரும் வேதனையான விடையம் !
இதில் 9 பாட்டு வேறு. திரைப்படம் முடியும் தருவாயில், விண்வெளி நாயகா என்ற பாட்டு , இதனை ஏன் போட்டார்கள் ? எதற்காக போட்டார்கள் என்றே தெரியாமல் மக்கள் குழம்ப. பின்னர் தான் இந்தப் பாட்டை கமல் எழுதியதாக கூறப்படுகிறது. தக் லைஃப் படத்தில் பல பாடல்களை கமலே எழுதி இசையும் அமைத்து, இப்படி தான் டியூன் போட வேண்டும் என்று ரகுமானுக்கே சொல்லிக் கொடுக்க… வேண்டா வெறுப்பாக ரகுமான் மியூசிக் போட… எல்லாமே ஒன்றாக சேர்ந்து கிரகம் பிடித்து விட்டது.
இதில் போதாக் குறைக்கு புளூ சாட்டை மாறன் வேறு படத்தை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டு விட்டார். பிட்டு படம் எடுத்திருக்காங்க என்று அவர் கூறி மணி ரத்தினத்தை கேவலமாக கொச்சைப்படுத்தி உள்ளார். இது எல்லாம் எனக்கு தேவையா ? என்று மணி யோசனை செய்து கொண்டு இருப்பார்.
தற்போது உள்ள தமிழ் இயக்குனர்களிடம் கை வசம் கதையே இல்லை போல இருக்கே ? முன்னராவது ஆங்கில படங்களை வைத்து படத்தை எடுத்தார்கள். தற்போது நெட் பிளிக்ஸ், அமேசன் போன்ற OTT தளங்கள் வந்தால், இந்தியர்கள் அதில் உள்ள ஆங்கிலப் படங்களை பார்பதால் , அதனை வைத்தும் படம் எடுக்க முடியாமல் போய் விட்டது. இதனால் இவர்களாக ஏதோ கற்பனை செய்து, படங்களை எடுக்கிறார்கள். சரியான எந்த ஒரு கதையும் இல்லாமல் இப்படி சொதப்புவதே இவர்களுக்கு வேலையாக மாறிவிட்டது.