தலைவருக்கு தமிழ் கற்பித்த பண்டிதர் திரு பரந்தாமன் ஐயா காலமானார் !

தலைவருக்கு தமிழ் கற்பித்த பண்டிதர் திரு பரந்தாமன் ஐயா காலமானார் !

தமிழீழ போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் உதவியவரும், தமிழ் ஈழத் தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டலில் பல பொறுப்புகளை வகித்தவரும், போராளிகளுக்கும் தமிழ் ஆசானாக விளங்கிய பண்டிதர் திரு பரந்தாமன் அவர்கள் 14/06/25 காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது.

அவர் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கூட தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். அதாவது சங்க இலக்கியங்கள், சோழர் கால தமிழ் எழுத்துகள் என்று பலதரப்பட்ட புத்தங்களை தலைவர் விரும்பி படிப்பது வழக்கம். அதில் இருக்கும் சில சொற்கள் புரியாதவை. அதனைக் கூட துல்லியமாக சொல்லி விடுவார் ஐயா…

தமிழில் மிகவும் ஆழமான நுன் அறிவுகொண்ட, பண்டிதர் பரந்தாமன் ஐயா அவர்களை பாராட்டி, 1995ம் ஆண்டு தேசிய தலைவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியை இங்கே இணைத்துள்ளோம். அன்னார் ஆத்தா சாந்தியடைய … அதிர்வும் பிரார்த்திக்கிறது.