ஏர் இந்தியா விபத்திற்கு மோடி அரசே காரணம்: நிறுவனத்தை நாசமாக்கியது யார் ?

ஏர் இந்தியா விபத்திற்கு மோடி அரசே காரணம்: நிறுவனத்தை நாசமாக்கியது யார் ?

ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா(TATA)குழுமம் எடுத்து மிக மிகச் சிறப்பாக நடத்தி வந்தது. ஆனால் அதனை டாட்டாவிடம் இருந்து பறித்து, மீண்டும் தேசிய நிறுவனமாக மோடி அறிவித்து இருந்தார். இதேவேளை ஏர் இந்தியா நிறுவனத்தில் 30% சத விகிதமான ஆள் குறைப்பும் நடைபெற்றுள்ளதும் வெளிச்சமாகியுள்ளது.

விமான ஊழியர்களை குறைத்தால், எப்படி விமான சேவையை ஒழுங்காக நடத்துவது ? இதில் எப்படி விமானம் சரியாக இருக்கிறதா என்ற பரிசோதனைகளை நடத்துபவர்கள் குறைவாக இருந்தால், பெரும் கவனக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை..

போயிங் விமானத்தின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று இந்தியா சென்றடைந்துள்ளது. விமானம் ஏன் திடீரென செயல் இழந்தது என்பது தொடர்பாக அவர்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து தகவலை வெளியிட உள்ளார்கள். வியாழக் கிழமை வீழ்ந்த விமான போயிங் டிரீம் லைனர் என்று கூறப்படுகிறது. இது மிகவும் அதி நவீன விமானம் ஆகும்.

அப்படி இருக்கையில் அதில் எப்படி எந்திரக் கோளாறு வரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஏர் இந்தியாவில் ஆட் குறைப்பு நடந்ததே இதற்கு காரணம் என்று பெயர் குறிப்பிடாத ஒரு அதிகாரி, அல்- ஜசீரா TVக்கு தெரிவித்துள்ளார்.