ஈரான் பாவிக்கும் பஸ்டிக் ஏவுகணை எப்படி பலம் வாய்ந்ததாக உள்ளது தெரியுமா ?

ஈரான் பாவிக்கும் பஸ்டிக் ஏவுகணை எப்படி பலம் வாய்ந்ததாக உள்ளது தெரியுமா ?

ஈரான் பயன்படுத்தும், பலஸ்டிக் ஏவுகணைகளை ஏன் இஸ்ரேலால் தடுக்க முடியவில்லை ? இந்த ஏவுகணைகளை யார் கொடுக்கிறார்கள் ? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. முதலாவது பலஸ்டிக் ஏவுகணை என்பது, ராக்கெட் ஒன்றுடன் இணைக்கப்பட்டு தான் செலுத்தப்படுகிறது. இவை ராக்கெட் செல்வது போல செங்குத்தாக, சுமார் 40,000 ஆயிரம் அடி உயரப் பறந்து செல்கிறது.

பின்னர் பொருத்தப்பட்ட ராக்கெட், களன்று கீழே விழுந்த உடனே தனது இலக்கை நோக்கி, செங்குத்தாக செல்கிறது இந்த ஏவுகணை. அது பூமியை நோக்கி வரும் போது வளைந்து வளைந்து வருவதால், அதனை தாக்கி அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் இஸ்ரேல் அயன் டோம் என்று அழைக்கப்படும் வான் பாதுகாப்பு சிஸ்டம் இவற்றில் பெரும்பாலனவற்றை அழிக்கிறது. ஆனாலும் சில தப்பிப் பிழைத்து வந்து இஸ்ரேலை தாக்கியுள்ளது. அது பெரும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பலஸ்டிக் ஏவுகணைகளை, வல்லரசு நாடுகள் தயாரித்து வைத்துள்ளது. ஆனால் ஈரான் தானே வடிவமைத்து இந்த பலஸ்டிக் ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது பெரும் அதிர்ச்சிகரமான விடையம். மேலும் ஈரான் ஒரு முறை ஏவுகணைகளை எவினால், இஸ்ரேலை பாதுகாக்க அயன் டோமின் செலவு 1.2B பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. அந்த அளவு ஏவுகணைகளை இஸ்ரேல் வானில் ஏவினால் தான், குறைந்த பட்சம் இதனை தடுக்க முடியும்.

ஆனால் ஈரானின் இந்த ஏவுகணைகளோ உள்ளூர் தயாரிப்பு. ஈரானுக்கு பெரும் செலவு இல்லை. இதனால் ஈரான் தொடர்ந்தும் இந்த பலஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வருகிறது. வரலாற்றில் முதல் தடவையாக இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் மக்கள் வீதிகளில் தெறித்து ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு. இரவு நேரங்களில் பதுங்கு குழிகளில் அல்லது பலமான கட்டத்தினுள் தஞ்சம் அடைய வேண்டி நிலையில் உள்ளார்கள். இது போக நேற்றைய தினம்(17) தனது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக ஈரான் மேலும் அறிவித்துள்ளது.