இந்திய விமானத்தில் 11A ஆசனம்: இதனால் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார்

இந்திய விமானத்தில் 11A ஆசனம்: இதனால் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார்

அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொருங்கி 241 பேர் இறந்துள்ள நிலையில். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியக்க… அதிசயம் ஆனால் உண்மை தான் என்கிறார் விஷ்வாஸ் குமார். இவருக்கு 40 வயது பிரிட்டன் லெஸ்டரில் வாழ்ந்து வருகிறார். இவர் பிறப்பால் இந்தியர் என்றாலும் பிரிட்டன் பிரஜா உரிமை பெற்றவர்.

அஹமதாபாத்தில் இருந்து விமானம் புறப்பட்டவேளை அவர் 11A என்ற ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் Emergency Exit என்று சொல்லப்படும் கதவு இருந்துள்ளது. இவ்வாறு விமானத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், முதலில் அனைவரும் சீட் பெல்டை போடுங்கள் என்று தான் விமானி மற்றும் பணிப் பெண்கள் கூறுவார்கள். ஆனால் சிலருக்கு உள்மனது என்ன சொல்கிறதோ அதனைத் தான் செய்வார்கள்.

அவ்வாறு தான் இங்கே நடந்துள்ளது. விமானம் சென்று வைத்தியசாலை கட்டத்தில் மோதிய உடனே தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் கதவுக்கு அருகே இருந்த விஷ்வாஸ் குமார், திடீரெனப் பார்த்தால் அந்த கதவு தானாக திறந்து கொண்டது என்கிறார். இதனால் அவர் கீழே குதித்து விட்டார். விமானத்திற்கு உள்ளே நெருப்பு பரவியதால் பலர் உடல் கருகி இறந்து போக, வெளியே குதித்த விஷ்வாஸ் குமார் பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளார்.

பலரது உடல்கள் கருகிய நிலையில் உள்ளதால், யார் எவர் என்று அடையாளம் காணவே முடியாத நிலை. இதனால் உறவினர்கள் தமது ரத்தத்தை கொடுத்து DNA பசிசோதனை செய்து, தமது உறவுகளின் உடல்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சில சமயங்களில் நாம் துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் எங்களை காப்பாற்றும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம் ஆகும்.