அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைப்பு
அகமதாபாத்: டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த AI159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லண்டன் செல்லும் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் பிற்பகல் 1:10 மணிக்கு லண்டன் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, விமானம் புறப்படுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று ஏற்பாடுகள் குறித்து விமான நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்திற்கு உள்ளாகி, 241 பயணிகளை காவு வாங்கிய நிலையில். இன்றைய தினம்(17) அகமதாபாத்தில் இருந்து லண்டன் கட் விக் புறப்பட இருந்த விமானத்தில் கோளாறு ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலர் ஏர் இந்தியாவில் பயணிக்கவே தற்போது அச்சத்தில் உள்ள நிலையில், இன்றைய தினம் நடந்த இந்த சம்பவம் மக்களை மேலும் கிலி கொள்ள வைத்துள்ளது.