NATO நாடுகளோடு இணைந்துள்ள FINLAND நாட்டை கைப்பற்றவும். அப்படி ஒரு போரை தொடுத்தால் NATO படையணி எவ்வாறு தாக்குதலை முன்னெடுக்கும் என்று பார்க்க, ரஷ்ய அதிபர் புட்டின், முதலில் பின்லாந்து(FINLAND) நாட்டின் மீது போர் ஒன்றை தொடுக்க உள்ளதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது.
நேட்டோ படையையணிக்கு உடனே தனது துருப்புகளை இங்கிலாந்து அனுப்பவேண்டி இருக்கும். இதனூடாக இங்கிலாந்தில் உள்ள தாய்மார்கள் தமது பிள்ளைகள் பின்லாந்து போரில் இறக்கக் கூடும் என்று மனதை தைரியமாக வைத்திருக்க வேண்டும் என்று பிரித்தானிய செய்திச் சேவை இன்று செய்தி ஒன்றை வெளியிட்டு. அனைவரையும் கிலி கொள்ள வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டின், ஏதோ அமைதியாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் திரை மறைவில் அவர் பெரும் போர் திட்டம் ஒன்றுடன் இருக்கிறார் என்பது புலப்படுகிறது. சமீபகாலமாக பின்லாந்து நாடு மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் எல்லையில், பல்லாயிரம் துருப்புகளை ரஷ்யா நிலைகொள்ள வைத்துள்ளது. நேட்டோ நாடு எப்படி திருப்பி அடிக்கும் ? என்ற ஒத்திகை ஒன்றை பார்க்க புட்டின் துணிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஐரோப்பிய நாடுகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு தமது ஆயுத பலத்தை பன் மடங்காக பெருக்கி வருகிறார்கள். இவை அனைத்தும் தற்செயலாக நடக்கவில்லை. மிகவும் துல்லியமாக கிடைக்கும் உளவுத் தகவலின் அடிப்படையில், பல நாடுகள் தமது பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்த நாடுகள் வெளிப்படையாக எதனையும் தெரிவிப்பது இல்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை மட்டும் திடீரென அதிகரித்து உள்ள விடையம் மக்கள் மத்தியில் பெரும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்
பிரித்தானியா இஸ்ரேலை ஒத்த ஒரு இரும்பு பாதுகாப்பு வளையத்தை லண்டனில் நிறுவ உள்ளது. லண்டன் மேல் எந்த ஏவுகணை வந்தாலும் அதனை தடுத்து நிறுத்தும் திறன்கொன்டதாக இது அமையும் என்று கியர் ஸ்டாமர் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார். இது போன்ற கருத்துகள் 2ம் உலகப் போருக்கு பின்னர், தற்பொழுது தான் அரசியல் தலைவர்களின் வாயில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.