சவுத்போர்ட், லிவர்பூல்: இதயமற்ற ஒரு சம்பவம், பிரித்தானிய நீதிமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நாயின் மீது ஒரு ‘கொடுரமான’ குற்றச்சாட்டை முன்வைத்த தந்தையை, அவரது மகனே அடித்துக் கொலை செய்ததாக குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் சரவன்ஸ்கி (52), தனது தந்தை இவான் சரவன்ஸ்கி (73), சவுத்போர்ட்டில் உள்ள தனது வீட்டில் ஒரு “நோக்கமிட்ட மற்றும் நீடித்த தாக்குதலில்” பல டஜன் காயங்களுடன் இறந்தது தொடர்பாக, லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
நடுங்கவைக்கும் வாக்குமூலம்!
கடந்த டிசம்பரில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, ஜான் சரவன்ஸ்கி அண்டை வீட்டார் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, “நான் என் தந்தையின் தலையின் மீது குதித்தேன்” என்று “அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலம்” அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ ஊழியர்களிடம், “அவர் இறந்துவிட்டது எனக்கு கவலையில்லை. அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல,” என்று கூறியிருக்கிறார்.
பழிவாங்கும் உந்துதல்: நாய் மரணமும் பணப் பிணக்கும்!
இறந்த இவான் மற்றும் அவரது மகன் ஜான் ஆகியோரிடையே பணம் மற்றும் ஜானின் நாய் ‘சியூஸ்’ (Zeus) குறித்து தொடர்ச்சியான வாக்குவாதங்கள் இருந்து வந்ததாக லிவர்பூல் எக்கோ தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு சியூஸ் இறந்தது, ஜானை “மிகவும் வருத்தத்தில்” ஆழ்த்தியுள்ளது. தனது தந்தை, கால்நடை மருத்துவர்களுடன் சதி செய்து தனது அமெரிக்கன் புல்டாக் இன நாய்க்கு விஷம் வைத்து கொன்றதாகக் குற்றம் சாட்டிய பிறகு, ஜானுக்குள் “பழிவாங்கும் உந்துதல்” ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தனது தந்தையின் மரணத்தின் போது தான் சம்பவ இடத்தில் இல்லை என்றும், வேறு ஒருவரால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், அல்லது இவான் “விரிவான காயங்களை” ஒரு வீழ்ச்சியின் போது பெற்றிருக்கலாம் என்றும் ஜான் கூறியிருந்தார். ஆனால் தற்போது, ஒரு கைகலப்பின் போது தற்காப்புக்காகவே செயல்பட்டதாக அவர் வாதிடுகிறார்.
சாட்சியம்: ஜாக் டேனியல்ஸ் மற்றும் பணம்!
இவானின் மரணம் நடந்த அன்று இரண்டு முறை குடும்ப வீட்டிற்குச் சென்ற ரஸ்ஸல் மோஸ், நேற்று நீதிபதிகள் முன்னிலையில் சாட்சியமளித்தார். ஜானுடன் ஆப்பிள் சுவையுள்ள ஜாக் டேனியல்ஸ் விஸ்கி குடித்ததை அவர் நினைவு கூர்ந்தார். “நாங்கள் குடித்துக் கொண்டிருந்தோம். ஜானிடம் 80 பவுண்டுகள் ரொக்கப் பணமும், ஒரு சில ஸ்கிராட்ச் கார்டுகளும், ஒரு பாட்டில் விஸ்கியும் இருந்தது. அதை வாங்க, 50 பவுண்டுகள் செலவாகும்,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் மேலும் என்ன அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.