இரண்டு பேரை தாக்கிய ஒரு பெண் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

சனிக்கிழமை மாலை 7:45 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், ஒக்டோபர்பெஸ்ட் (Oktoberfest) மைதானத்திற்கு அருகில் கத்தியால் பல வழிப்போக்கர்களை காயப்படுத்தினார் என பில்ட் (Bild) நாளிதழ் தெரிவித்துள்ளது.

அவர் மியூனிக்கின் வெஸ்டென்ட்ஸ்ட்ராஸ்ஸே (Westendstraße) பகுதியில் 56 வயதுடைய ஒரு ஆண் மீது தாக்குதல் நடத்தினார். அதன்பின்னர், குற்றவாளி 25 வயதுடைய ஒரு இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி அவரையும் காயப்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதையடுத்து, செயிண்ட் பால்ஸ் சதுக்கம் (St. Pauls Square) மற்றும் பவேரியாரிங் (Bavariaring) சந்திப்பில் பொலிஸார் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியவரை சுட்டனர். அருகாமையில் வசித்து வந்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண், சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் காயங்கள் காரணமாக சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

மியூனிக் பொலிஸ் கலவரப் படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொலிஸார் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். தெரேசியன்விஸ் – ஒக்டோபர்பெஸ்ட் நடக்கும் இடத்தில் பொலிஸ் மோப்ப நாய்கள் தடயங்களைத் தேடி வருகிறார்கள்.